
பண்ணைக் கருவிகள்
புத்தகத்தின் விலை | 95 |
- Description
காணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்காமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக்கொண்டுவிட்டன. தன் சொந்த நிலத்தில்கூட உழைக்க மறந்து பாதை மாறிவிட்டனர். அதனால் விவசாயம் செய்ய ஆளில்லாமல் கரடுக் காடாய் மாறிக்கொண்டிருக்கின்றன விவசாய நிலங்கள். என்றாலும், விவசாயமே எங்களின் எல்லாமும் என எண்ணி உழைப்பவர்களும் இருக்கிறார்கள். விவசாயம் செய்ய ஆள் கிடைக்காவிட்டாலும் அவர்கள், தங்கள் நிலத்தை தரிசாக்காமல் செழிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பெருந்துணையாய் இருப்பவை விவசாயக் கருவிகள். அந்தக் கருவிகளைப் பற்றியும் அவற்றின் பயன்பாடு பற்றியும் கூறுகிறது இந்த நூல். தென்னை மரம் ஏற, நிலத்தை உழ, பூச்சி விரட்ட, கரும்பு வெட்ட, களை எடுக்க... என அனைத்து விதமான விவசாய வேலைகளுக்கும் இப்போது கருவிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட கருவிகளின் துணையால் விவசாயம் செய்து பயன் அடைந்தவர்களின் அனுபவங்களையும், எந்தெந்த கருவியை எதற்குப் பயன்படுத்தலாம் என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்த நூல். பண்ணைக் கருவிகளின் பயன்பாட்டையும் பராமரிப்பையும், விளக்கமாகக் கூறும் இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் பசுமை விகடனில் வெளிவந்தவை. அவற்றின் முழுத் தொகுப்பே இந்த நூல். பயனின்றிக் கிடக்கும் தங்கள் நிலங்களுக்கு பசுமையைப் போர்த்திவிட விவசாயிகளுக்கு இந்த நூல் நிச்சயம் உற்சாகம் ஊட்டும். கருவிகளின் பயன் அறியுங்கள், பயன்படுத்துங்கள், பயன்பெறுங்கள்!
New Releases
-
599
உன் கண்ணில் நீர் வழிந்தால்
-
275
வெந்து தணிந்தது காடு
Add to Cart -
999
தில்லானா மோகனாம்பாள்
Add to Cart -
190
இயற்கை வழியில் அசத்தல் அழகு!
Add to Cart -
245
ஆரோக்கியம் ஒரு பிளேட்
Add to Cart -
190
சேமிப்பும் முதலீடும்
Add to Cart -
350
விகடன் இயர் புக் 2023
Add to Cart -
430
கடவுள் பிசாசு நிலம்
Add to Cart -
310
போராட்டங்களின் கதை
Add to Cart -
200
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
Add to Cart