Author : எம்.நாச்சிமுத்து
Print book
₹220
தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் எந்த மரம் இருக்கிறதோ இல்லையோ முருங்கை மரம் நிச்சயம் இருந்தே தீரும். அந்த அளவுக்கு தமிழ்க் குடும்பங்களுடன் பின்னிப் பிணைந்து வளர்ந்து வருகிறது முருங்கை மரம். இலை, காய், விதை, மட்டை என முருங்கையின் எல்லாவற்றிலுமே மருத்துவம் குணம் நிறைந்திருக்கின்றன. அதனால்தானோ என்னவோ அந்த மரத்தின் முழுப் பலனை இன்னும் நாம் அறியாமலேயே இருக்கிறோம். ரத்த சோகை போன்ற பல்வேறு நோய்களைப் போக்கும் முருங்கையின் பலன்கள் பற்றிச் சொல்லவே ‘முருங்கையைத் தின்றால், முந்நூறும் போகும்’ என்று ஒரு சொலவடை தோன்றியது. இப்படி மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கும் முருங்கையின் மகத்துவங்களை விளக்கி பசுமை விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகள், ஊட்டச்சத்து உணவுகள், அழகுசாதனப் பொருள்கள் என பலவற்றிலும் முருங்கையின் பொருள்களை எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றன என்பது பற்றியும் அதன் ஏற்றுமதி மதிப்பையும் முருங்கையை இன்னும் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் விரிவாகக் கூறுகிறது இந்த நூல். சாதாரண மரமாகக் காட்சிதரும் முருங்கையின் மகத்துவங்கள் பற்றி இனி அறியலாம்.
Read More
Generic Name : Book
Book code : 1147
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-93-94265-57-8
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00