Author : டாக்டர் வி.ஜெயந்தினி
Print book
₹70
Out of Stock
குழந்தைகள், இந்த உலகத்தின் ஈரத்தை இன்னமும் காப்பாற்றி வைத்திருப்பவர்கள். வறுமை தொடங்கி வன்முறை வரையிலான எந்த விஷயத்தையும் குழந்தைகள் சட்டைசெய்வது இல்லை. இந்த உலகம் இன்ப நீச்சலுக்கான தண்ணீர்த் தொட்டி என்பதுதான் குழந்தைகளின் பார்வை. ஆனால், நாம் குழந்தைகளைக் கையாளும் விதங்கள் எப்படி இருக்கின்றன? நாம் நினைக்கும்போது அந்தக் குழந்தை சிரிக்க வேண்டும்; நாம் சொல்வதைக் கேட்க வேண்டும். நாம் வலியுறுத்துவதை ஏற்க வேண்டும். எதிர்பார்ப்பு என்கிற பெயரில் இப்படி எத்தனைவிதமான நெருக்கடிகள்? சாப்பாடு தொடங்கி படிப்பு வரையிலான அத்தனை விஷயங்களையும் நம் விருப்பப்படியே குழந்தைகள் மீது திணிக்கிறோம். உலகத்தின் புது வரவுகளுக்கு நாம் வழிகாட்டும் பக்குவமா இது? குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்கிற நுண்கலையை இந்த நூலின்வழியே கற்றுத் தருகிறார் டாக்டர் வி.ஜெயந்தினி. பெற்றோர்கள் குழந்தையிடம் எதிர்பார்ப்பதைப்போலவே குழந்தையும் பெற்றோர், ஆசிரியர், சமூகம் ஆகியவற்றிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அதனைப் புரிந்து நடப்பதே அந்தக் குழந்தையை நம்பர் 1 ஆக்குவதற்கானத் தகுதி என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறார் டாக்டர் வி.ஜெயந்தினி. ‘அவள் விகடனில்’ தொடராக வந்த கருத்துக்கள் இப்போது புத்தக வடிவில்! உங்கள் குழந்தையை நம்பர் 1 ஆக்க, இந்த நூல் நிச்சயம் உதவிகரமாக விளங்கும்.
Read More
Generic Name : Book
Book code : 658
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-424-6
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00