Author : அ.ச.ஞானசம்பந்தன்
Print book
₹180
Print on Demand
Quantity
Add to Cart
Buy Now
+ Additional Delivery charges will apply
‘‘கம்பன் காப்பியத்திலிருந்து திறனாய்வு நோக்கோடு, ‘நாடும் மன்னும்’, ‘அரசியர் மூவர்’, ‘தம்பியர் இருவர்’ \ ஆகிய மூன்று நூல்களை எழுதினேன். ஆனால் என் தமிழ் நடை கடினமானதாக இருந்ததை உணர்ந்தேன். அந்த நடையில் மாற்றம் வரும் நாள் ஒன்றும் வந்தது. ‘‘ஒருநாள், ராயப்பேட்டை பசார் ரோட்டில் உள்ள சிறுமாடியில் குடியிருந்தேன். எதிர்பாராமல் என் வீட்டுக்கு வந்தார், ஆனந்தவிகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன். ‘திருக்குறளை அடிப்படையாக வைத்து, இருபது முப்பது கட்டுரைகள் எழுதித் தரவேண்டும்’ என்றார். அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் வரும் கதை கட்டுரைகள் பெரும்பாலும் பிராமண சமூகத்தினரின் பேச்சு நடையாகவே இருக்கும். அந்த நடையில் என்னால் எழுத இயலாது என்று பணிவுடன் சொன்னேன். அவரோ, சொற்பொழிவுக்குப் போகின்ற நான் கூட்டத்தாரின் திறத்துக்கு ஏற்ப எளிய நடையில் பேசுவதை எடுத்துக்காட்டி, எழுத்து நடையும் அதுபோல் இருக்கட்டும் என்று பிடிவாதமாகச் சொல்ல, எழுத ஒப்புக் கொண்டேன். ‘‘புறப்படும் முன் வாயிற்படியில் நின்று கொண்டு அவர் சொன்னது, என் எழுத்து நடையை முற்றிலும் மாற்றியமைத்து விட்டது. அவர் சொன்னார்...‘அ.ச.! ஆனந்தவிகடனை யார் அதிகம் படிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். பெரும்பாலும் அதில் வரும் கதைகளை அனைவரும் படிக்கிறார்கள். இலக்கியத் தொடர்புடைய கட்டுரைகளை ஒருசிலரே படிப்பார்கள். குடும்பத் தலைவிகள் சோறு வெந்தவுடன் கஞ்சியை வடிப்பதற்காகச் சோற்றுப் பானையைச் சரித்து வைத்துவிட்டுக் கஞ்சி வடிகின்ற நேரம் காத்திருக்கும்போது ஆனந்த விகடனைப் படிப்பார்கள். அந்தப் பெண்களுக்குப் புரியும் வகையில் உங்கள் கட்டுரை அமைய வேண்டும். எழுதி அனுப்புங்கள்!’ என்றார். ‘குறள் கண்ட வாழ்வு’ அப்படித்தான் உதித்தது. என் எழுத்து நடையை மாற்றியமைத்ததில் குறள் கண்ட வாழ்வும், எஸ்.எஸ்.வாசனும் முக்கியப் பங்கு வகித்ததை மறக்க முடியாது...’’ - இப்படி அமரர் அ.ச.ஞானசம்பந்தன் தன் நினைவலைகளைப் பதிந்துவைத்துள்ளார். அவருடைய எழுத்துப் பணியில் மிகவும் திருப்தி தந்த பணியாக இந்தக் ‘குறள் கண்ட வாழ்வை’ அவர் கருதினார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் குறள் வழி நடந்த சான்றோரின் வாழ்க்கைப் பாதையும், அவர்கள் தங்களுக்கு வந்த சிக்கலான கட்டங்களில் எப்படி குறள் சொன்ன வாழ்வை வாழ்ந்து காட்டினர் என்பதும் எளிய நடையில் விளக்கியிருக்கக் காணலாம். அமரர் அ.ச.ஞா.வின் ‘மாஸ்டர்பீஸ்’ என்று சொல்லுமளவுக்குத் திகழும் இந்தத் தொகுப்பு நூல், தமிழ் இலக்கிய வாசகர்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும்.
Read More
Generic Name : Book
Book code : 304
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-061-3
Country of Origin : India
Contact us : books@vikatan.com
Print on Demand
₹180
M.R.P: ₹180.00
10% discount will be applied at checkout
Quantity
Add to Cart
Buy Now
+ Additional Delivery charges will apply