Author : ஆரூர்தாஸ்
Print book
₹90
திரையுலக வரலாற்றை எழுதுவதானால், ‘சிவாஜிக்கு முன் _ சிவாஜிக்குப் பின்’ என்றுதான் சொல்லி எழுத வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற நடிகராக விளங்கியவர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனின் நடிப்புலக வாழ்க்கையை ஆதி முதல் அந்தம் வரை அற்புதமாக விவரித்திருக்கும் ஆரூர்தாஸ், சிவாஜியின் நெருங்கிய நண்பராக இருந்ததன் மூலம் வேறு யாருக்கும் தெரிந்திருக்காத பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த நூலில் தொகுத்திருக்கிறார். சிவாஜி கணேசன் தன் நடிப்பாற்றலின் மூலம் நம்மை எப்படிக் கட்டிப் போடுவாரோ அதேபோல, ஆரூர்தாஸும் தனது எழுத்து வன்மையால் இந்த நூலில் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். சிவாஜி கணேசனின் நடிப்புலக ஆசிரியராக சதா சர்வ காலமும் கையில் பிரம்புடன் சுற்றிவந்த சந்தானம் வாத்தியார், பின்னாளில் சிவாஜி கணேசன் மாபெரும் நடிகராக ஆன பிறகு அவருடைய படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வரும்போது, கண்ணீர் மல்கச் சொல்லும் வார்த்தைகள்... பட்டு வேஷ்டியும், விசிறி மடிப்பு அங்கவஸ்திரமுமாக, சிவாஜியின் நாடகத்தை முன் வரிசையில் அமர்ந்து பார்த்துப் பாராட்டிய ஒருவர் பின்னாளில் சிவாஜியிடம் ஒரு வேலை கேட்டு வரும்
Read More
Generic Name : Book
Book code : 402
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-162-7
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00