Author : ரமேஷ் பிரபா
Print book
₹140
மேல்நிலைக் கல்வி முடித்த பிறகு அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்கள் மனதில் எழுவது இயல்பு. ஏனென்றால் மேல்நிலைக் கல்விக்குப் பிறகான படிப்புதான் ஒரு மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். எனவே, மாணவன் தேர்ந்தெடுக்கும் அந்தப் படிப்பு அதிமுக்கியமானதாக அமைகிறது. பொதுவாக மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி படிப்பைத் தேர்ந்தெடுத்தாலும் பெரும்பாலும் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில்தான் பெரும்பாலோர் கவனம் இருக்கும். ஆனால், இந்த இரண்டு படிப்புகள் தவிர இப்போது இன்னும் ஏராளமான படிப்புகள் படிக்க வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. பல்வேறு துறைகளில் இந்திய, உலகளவில் உள்ள படிப்புகள், அந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விவரங்கள், அவற்றில் எப்படிச் சேர்வது என்கிற வழிமுறைகள், அவற்றைப் படித்தால் என்ன வேலையில் சேரலாம்... என அனைத்து படிப்புகளைப் பற்றி விளக்கி ஆனந்த விகடனில் ‘நாளை என்ன வேலை?’ என்ற தலைப்பில் ரமேஷ் பிரபா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. உயர்கல்விப் பயிலப்போகும் மாணவர்களை ஒளிமயமான எதிர்காலத்துக்கு இட்டுச்செல்லும் இன்றியமையாத வழிகாட்டி இந்த நூல்!
Read More
Generic Name : Book
Book code : 1141
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-93-94265-18-9
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00