Author : கானப்ரியன்
Print book
₹540
தமிழகத்தை ஆண்ட சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களில் பாண்டிய மன்னர்களுக்கு என்று தனிப் பெருமையும் புகழும் உண்டு. காரணம் முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூதூராம் மதுரையை தலைமையிடமாகக்கொண்டே பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்தார்கள். அப்படிப்பட்ட பாண்டிய மன்னர்களின் வரிசையில் ஒருவர்தான் சடையவர்மன் வல்லப பாண்டியன். இந்த மன்னனை நாயகனாகக் கொண்டு புனையப் பட்ட நாவல் இது. பல்லவ நாட்டுக்குள் வந்து தன் காதலியை அடையத் துடிக்கும் ஒருவனை வீழ்த்தி தன் காதலியின் கரம்பிடிக்கும் வல்லபன் பின்னர் பாண்டிய நாட்டுக்கு வந்து அரசுப் பொறுப்பை ஏற்கிறான். ஒரு கட்டத்தில் தன் நண்பன் ஜெயாதித்தன் மீது வல்லபன் பொறாமைகொண்டு அவனை அரண்மனையில் இருந்து வெளியேற்றுகிறான். ஜெயாதித்தன் எங்கே சென்றான், வல்லபனைத் தேடிவரும் முதல் மனைவி யார், பாண்டிய நாட்டின் மீது இலங்கை மன்னன் ஏன் படையெடுக்கிறான், இரண்டாம் மனைவி இளவரசி அக்கள்நிம்மடி ஜெயாதித்தனைக் கண்டுபிடித்து அவனிடம் என்ன உதவி கோருகிறாள் என்பதையெல்லாம் விறுவிறுப்பாகவும் சுவராஸ்யமாகவும் சொல்லும் புனைவு இது. சரித்திரமும் புனைவும் இணைந்து உங்களை பாண்டிய நாட்டுக்குள் பிரவேசிக்கவைக்கப்போகின்றன.
Read More
Generic Name : Book
Book code : 1157
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-93-94265-96-7
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00