Author : மாரி செல்வராஜ்
Print book
₹270
பால்யத்தின் நினைவுகள் ஒருபோதும் இதயத்திலிருந்து கரைவதில்லை. வாழ்வில் எத்தனைப் புயலடித்தாலும் மழையடித்தாலும் அவை உதிர்வதில்லை. மாறாக, வாழ்வும் உளமும் போராட்டங்களில் அலைவுறும்போது, நினைவுகள் மேலும் வீரியமடைகின்றன. அப்படியான தன் வாழ்வின் தீவிரமான நினைவுகளை; தருணங்களை இயக்குநர் மாரி செல்வராஜ், ‘சம்படி ஆட்டமாக’ இந்நூலில் ஆடிக்காட்டியிருக்கிறார். தன் நிலத்தை, தன் சக உயிர்களை, தன் மனிதர்களை, தன் கனவுகளை, தன் உலகின் வாதைகளை; தன் தோல்விகளை; வெற்றிகளை, மிகக் காத்திரமாகவும் உணர்ச்சி பொங்கவும் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்நூல், அவரின் மொத்தப் படைப்புகளும் உருவாகக் காரணமாயிருந்த ஊற்றுக்கண்கள் குறித்த அறிமுகமாக இருக்கிறது. அவரது படைப்புகளைப் புரிந்துகொள்ள உதவும் கவித்துவ காட்சியகராதியாக இருக்கிறது. ‘சம்படி ஆட்டம்’ எனும் தலைப்பில், ஆனந்த விகடன் இதழில் தொடராகப் பல வாரங்கள் வெளிவந்தபோது, வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இக்கட்டுரைகள், ஒரே மூச்சில் வாசித்து இன்புற இப்போது சிறப்பான வடிவமைப்பில் நூலாக்கம் பெறுகிறது. மாரி செல்வராஜ் எனும் படைப்பாளியை; அவரின் கலையுலகை அறிந்துகொள்ள; புரிந்து கொள்ள, இந்நூல் ஓர் அழகான வாசலை அகலத் திறக்கிறது!
Read More
Generic Name : Book
Book code : 1160
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-93-94265-55-4
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00