Author : டி.எல்.சஞ்சீவி குமார்
Print book
₹115
Ebook
₹81₹11530% off
Out of Stock
‘‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்... இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்!’’ - குடிவாழ்வின் உண்மைச் சாட்சியமாக கண்ணதாசன் எழுதிவைத்த வரிகள் இவை. குடிப் பிரச்னையில் இருந்து மீள்வது பல நேரங்களில் சாத்தியமற்றதாகத்தான் இருக்கிறது. ‘இன்றையில் இருந்து குடிக்க மாட்டேன்; வருடப் பிறப்பிலிருந்து குடியை நிறுத்திவிட்டு புது வாழ்க்கை வாழப்போறேன்; பிறந்த நாள் பார்ட்டியோடு இந்த கட்டிங்குக்கு கட்டிங்க்; திருமணத்துக்குப் பிறகு குவார்ட்டருக்கு குட்பை’ என்கிற சபதங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால், ‘விடு மச்சி... சரக்கு அடிக்காட்டி சர்டிபிகேட்டா கொடுக்குறாய்ங்க?’ என யாரோ ஒரு நண்பனின் உசுப்பேற்றலில் மறுபடியும் மட்டையாகுபவர்கள் அதிகம். போதைப்பழக்கம் எத்தனைக் கொடுமையானது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், ‘இவ்வளவு கொடூரமானதா?’ என ஒவ்வொருவரையும் திகைக்க வைத்தது ‘மயக்கம் என்ன?’ தொடர். ஜூனியர் விகடனில் வாரம் இருமுறை இந்தத் தொடர் வந்தபோதுதான் குடியின் அவலமும் கொடூரமும் பொளேரெனப் புரிந்தது. ‘இன்றைய சமூகத்துக்குத் தேவையான மிக அவசியமான பணியை விகடன் கையில் எடுத்திருக்கிறது!’ என நெஞ்சில் கைவைத்துச் சொன்னவர்கள் நிறைய பேர். மதுவின் தீமையை, அதன் மிக மோசமான பாதிப்புகளை, குடும்பங்களின் சீரழிவை, சகிக்க முடியாத நோய்களை அறிவுலக நியாயங்களுடன் அழுத்தமாக விளக்கும் இந்தப் புத்தகம், குடியின் பிடியில் இருந்து இந்தச் சமூகத்தையே காப்பாற்றும் சாலச் சிறந்த கருவி!
Read More
Generic Name : Book
Book code : 701
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-467-3
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00