Author : பாரதி தம்பி
Print book
₹220
Ebook
₹77₹11030% off
Out of Stock
தண்ணீருக்காக அக்கம் பக்க வீடுகளுக்கு இடையிலும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலும் தகராறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாடுகளுக்கிடையே தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் மூளும் என்று அறிஞர்கள் ஆருடம் சொல்கிறார்கள். குளங்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பு செய்தாகிவிட்டது; அடுக்குமாடி வீடுகளாகிவிட்டன. மழை நீரைத் தேக்கி வைக்க வழி செய்யப்படாததால் அது வீணாகக் கடலில்தான் கலக்கிறது. அரசாங்கம் தீட்டும் திட்டங்களை மட்டும் எதிர்பார்க்காமல், ஒவ்வொருவரும் மழை நீரைச் சேகரிக்கவும் அது வீணாவதைத் தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை விலை கொடுத்து வாங்கினாலும் அந்தத் தண்ணீர் சுத்தமானதா என்றால்... அது கேள்விக்குறிதான். ஜூனியர் விகடனில் வெளிவந்தபோதே வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ‘தவிக்குதே... தவிக்குதே...’ தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்... ‘மகாராஷ்டிரா மாநில ஜல்னா மாவட்டத்தில் மட்டும் ஓர் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் தண்ணீர் டேங்கர் லாரிகள் தயாரிக்கப்படுகின்றன’ என்னும் தகவல் நமக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. ‘ஒவ்வொரு முறை அரசு வளர்ச்சித் திட்டத்தை அறிவிக்கும்போதும் தமிழ்நாட்டில் ஓர் ஏரி பலிகொடுக்கத் தயார் செய்யப்படுகிறது என்பதே பொருள்’ என்று கூறுவதிலிருந்தே, நாளை நடக்கப் போகும் அபாயத்தை நம் கண்முன் நிறுத்துகிறார் நூல் ஆசிரியர் பாரதி தம்பி. தண்ணீர் மாசுபடுவதைப்பற்றி கவலைப்படும் நூல் ஆசிரியர் அரசியல்வாதிகளின் தில்லுமுல்லு வேலைகளையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு. தண்ணீரை சேமிப்போம்! பூமியைப் பாதுகாப்போம்!
Read More
Generic Name : Book
Book code : 788
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-554-0
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00